தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பப் பட்டியலில் இருக்கும் கல்லூரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சென்னை ஐஐடி, அண்ணா பொறியியல் கல்லூரி, திருச்சி NIT (REC) போன்றவை பட்டியலில் முதலில் இருக்கும் கல்லூரிகள்.
திருச்சி NIT யில் படிக்கும் மாணவர்கள் நிம்மதியாக படிக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். முதல் வருடம் சேரும் மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் கொடுக்கும் டார்ச்சர் மிக அதிகம்.
சீனியர் மாணவர்கள் தாங்கள் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தது போல் ஜூனியர் மாணவர்களை அடிமைகள் போல் நட்த்துகிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் வகுப்பறைக்கு வந்து சீனியர் மாணவர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதும் அவர்கள் மனம் நோகும் படியாக நடந்து கொள்வதும் என்று கொஞ்சம் கூட மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். புதிதாக வரும் மாணவிகளிடம் சீனியர் மாணவிகள் செய்யும் டார்ச்சர்களால் அவர்கள் எதிரிலேயே அழுது விடுவதும் உண்டு அப்பொழுதும் அவர்கள் மீது அவர்களுக்கு இரக்கம் வருவதில்லை.
ராகிங்கால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் விஷயம் உங்கள் பார்வைக்கு.
உனக்கு REC la சீட்டு கிடைச்சிடுச்சி
என்று ISD போட்டு தங்கைக்கு சொன்னபோது நானும் அவளும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நீதான் REC ல படிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்ட இப்ப உன் தங்கை படிக்கப் போறா, என்று சித்தப்பா தன் மகளைப் பற்றி தொலைபேசியில் பெருமைப் பட்டுக்கொண்டார்.
கிட்டதட்ட அந்த வாரம் முழுவதுமே மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க என்று அலுவலகத்தில் எல்லோரும் வினவ, என் தங்கச்சிக்கு REC la சீட்டு கிடைச்சிடுச்சி என்று சொல்ல திரு திருவென்று விழித்தார்கள். பிறகு சுதாரித்துக் கொண்டு ஆங்கிலத்தில் விளக்கினேன்.
கல்லூரிக்கு சென்று அட்மிஷன் போட்டதும் "காலேஜில் சேர்ந்து விட்டேன், ஹாஸ்டலில் இருக்கப் போகிறேன்" என்று சித்தப்பா செல்லில் இருந்து மெசேஜ் வந்த்து.
வேலை அதிகமா இருந்ததால், ஊரில் பதினைந்து நாட்களா யாருக்கும் போனில் பேசவில்லை. வெள்ளி விடுமுறை என்பதால் ஊருக்கு போன் செய்தேன், ******** எப்படி ஹாஸ்டல்ல இருக்குன்னு கேட்க சித்தப்பா வீட்டுக்கு போன் செய்தேன்.
ரிசீவரை எடுத்து ******** ஹலோ என்று சொல்ல, அதிர்ச்சியாக இருந்தது.
ஏய் என்ன காலேஜு லீவா வெள்ளிக் கிழமை வீட்ல இருக்க. . . .
இல்லண்ண காலேஜ்லேர்ந்து வந்துட்டேன், எனக்கு அங்க சுத்தமா புடிக்கல. . . .
ஏன் என்ன ஆச்சு. ?
இல்ல சீனியர் எல்லாம் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க, எனக்கு அங்க படிக்கவே புடிக்கல
அதான் TC வாங்கிட்டு வந்துட்டேன். . . .
என்று ஆழத்தொடங்கினாள். . . .
என்ன TC வாங்கிட்டு வந்திட்டியா. . . .?
என்று நான் கேட்டதற்கு பதில் ஒன்று சொல்லாமல் அழுது கொண்டிருந்தவளிடம் இருந்து ரிசீவரை வாங்கி சித்தப்பா போசினார். நடந்த விஷயங்களை விபரமாக கூறினார்.
தொடரும் . . . . . .
------------------------------------------------------
ராகிங் என்ற பெயரில் ஒரு சக மாணவியை டார்ச்சர் செய்து அவள் எதிர்காலத்தையே நாசமாக்கி விட்டீர்களே, நீங்கெல்லாம் மனிதப் பிறவிகள் தானா. . . . . ?
ராகிங் செய்வது சட்டப் படி தவறு. அதை பல கல்லூரிகள் தடை செய்து விட்டன. மாண்வர்களை ராகிங் செய்யாமல் தடுக்க கல்லூரி பல முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.
நானும் கிட்டத்தட்ட 5 வருட் காலம் கல்லூரியில் படித்திருக்க்றேன். ராகிங் என்ற ஒன்று அங்கு கிடையவே கிடையாது.
NIT கல்லூரி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. நாவரசு விவகாரம் போல் பெரிதாக நடந்தால் தான் இவர்களுக்கு புத்தி வரும் போலிர்ருக்கிறது . . . . .
என்ன நிர்வாகமோ, என்ன கல்லூரியோ. . . . . ?
திருச்சி NIT யில் ராகிங்
Posted by
உக்கிரன்
at
10
comments
திருச்சி NIT யில் ராகிங்
உனக்கு REC la சீட்டு கிடைச்சிடுச்சி
என்று ISD போட்டு தங்கைக்கு சொன்னபோது நானும் அவளும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நீதான் REC ல படிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்ட இப்ப உன் தங்கை படிக்கப் போறா, என்று சித்தப்பா தன் மகளைப் பற்றி தொலைபேசியில் பெருமைப் பட்டுக்கொண்டார்.
கிட்டதட்ட அந்த வாரம் முழுவதுமே மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க என்று அலுவலகத்தில் எல்லோரும் வினவ, என் தங்கச்சிக்கு REC la சீட்டு கிடைச்சிடுச்சி என்று சொல்ல திரு திருவென்று விழித்தார்கள். பிறகு சுதாரித்துக் கொண்டு ஆங்கிலத்தில் விளக்கினேன்.
கல்லூரிக்கு சென்று அட்மிஷன் போட்டதும் "காலேஜில் சேர்ந்து விட்டேன், ஹாஸ்டலில் இருக்கப் போகிறேன்" என்று சித்தப்பா செல்லில் இருந்து மெசேஜ் வந்த்து.
வேலை அதிகமா இருந்ததால், ஊரில் பதினைந்து நாட்களா யாருக்கும் போனில் பேசவில்லை. வெள்ளி விடுமுறை என்பதால் ஊருக்கு போன் செய்தேன், ******** எப்படி ஹாஸ்டல்ல இருக்குன்னு கேட்க சித்தப்பா வீட்டுக்கு போன் செய்தேன்.
ரிசீவரை எடுத்து ******** ஹலோ என்று சொல்ல, அதிர்ச்சியாக இருந்தது.
ஏய் என்ன காலேஜு லீவா வெள்ளிக் கிழமை வீட்ல இருக்க. . . .
இல்லண்ண காலேஜ்லேர்ந்து வந்துட்டேன், எனக்கு அங்க சுத்தமா புடிக்கல. . . .
ஏன் என்ன ஆச்சு. ?
இல்ல சீனியர் எல்லாம் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க, எனக்கு அங்க படிக்கவே புடிக்கல
அதான் TC வாங்கிட்டு வந்துட்டேன். . . .
என்று ஆழத்தொடங்கினாள். . . .
என்ன TC வாங்கிட்டு வந்திட்டியா. . . .?
என்று நான் கேட்டதற்கு பதில் ஒன்று சொல்லாமல் அழுது கொண்டிருந்தவளிடம் இருந்து ரிசீவரை வாங்கி சித்தப்பா போசினார். நடந்த விஷயங்களை விபரமாக கூறினார்.
தொடரும் . . . . . .
------------------------------------------------------
ராகிங் என்ற பெயரில் ஒரு சக மாணவியை டார்ச்சர் செய்து அவள் எதிர்காலத்தையே நாசமாக்கி விட்டீர்களே, நீங்கெல்லாம் மனிதப் பிறவிகள் தானா. . . . . ?
ராகிங் செய்வது சட்டப் படி தவறு. அதை பல கல்லூரிகள் தடை செய்து விட்டன. மாண்வர்களை ராகிங் செய்யாமல் தடுக்க கல்லூரி பல முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.
நானும் கிட்டத்தட்ட 5 வருட் காலம் கல்லூரியில் படித்திருக்க்றேன். ராகிங் என்ற ஒன்று அங்கு கிடையவே கிடையாது.
NIT கல்லூரி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. நாவரசு விவகாரம் போல் பெரிதாக நடந்தால் தான் இவர்களுக்கு புத்தி வரும் போலிர்ருக்கிறது . . . . .
என்ன நிர்வாகமோ, என்ன கல்லூரியோ. . . . . ?
Posted by
உக்கிரன்
at
0
comments
திருச்சி NIT
தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பப் பட்டியலில் இருக்கும் கல்லூரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சென்னை ஐஐடி, அண்ணா பொறியியல் கல்லூரி, திருச்சி NIT (REC) போன்றவை பட்டியலில் முதலில் இருக்கும் கல்லூரிகள்.
திருச்சி NIT யில் படிக்கும் மாணவர்கள் நிம்மதியாக படிக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். முதல் வருடம் சேரும் மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் கொடுக்கும் டார்ச்சர் மிக அதிகம்.
சீனியர் மாணவர்கள் தாங்கள் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தது போல் ஜூனியர் மாணவர்களை அடிமைகள் போல் நட்த்துகிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் வகுப்பறைக்கு வந்து சீனியர் மாணவர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதும் அவர்கள் மனம் நோகும் படியாக நடந்து கொள்வதும் என்று கொஞ்சம் கூட மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். புதிதாக வரும் மாணவிகளிடம் சீனியர் மாணவிகள் செய்யும் டார்ச்சர்களால் அவர்கள் எதிரிலேயே அழுது விடுவதும் உண்டு அப்பொழுதும் அவர்கள் மீது அவர்களுக்கு இரக்கம் வருவதில்லை.
தொடரும். . . .
Posted by
உக்கிரன்
at
0
comments
